தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Monday, June 23, 2008

சிம்பு கால் எலும்பு முறிந்தது

சண்டை மற்றும் ஆக்‍ஷன் காட்சிகளில் வழக்கமாக நடிகர்கள் ஏதாவது காயம்பட்டுக் கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நடனம் ஆடும் போது அடிபட்டுக் கேட்டிருக்கிறீர்களா?

ஆம். சிலம்பரசன் தான் அந்த நடிகர். கடினமான நடன அசைவுகளை இயக்குனரிடம் கேட்டு வாங்கி அதனால் மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. `காளை' படத்தில் பாடல் காட்சியின்போது கட்டை விரலை உடைத்துக் கொண்ட சிம்பு, தற்போது நடித்து வரும் `சிலம்பாட்டம்' படத்தில் பாடல் காட்சியின் போது நடனம் ஆடி கால் மூட்டை உடைத்துக் கொண்டார்.

கவிஞர் வாலி எழுதிய `தமிழ் என்ற நானொரு தமிழன்டா' என்ற பாடல் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஷூட்டிங் நடைபெற்றது. நடன இயக்குனர் அசோக்ராஜ் நடனம் அமைக்க, சிம்பு மூட்டை தரையில் பதித்து ஆடுவது போன்ற காட்சி. ரிகர்சலில் சரியாகச் செய்த சிம்பு, டேக்கின்போது ஸ்லிப்பாகி தரையில் விழ மூட்டில் சரியான முறிவு.

வலியால் துடித்தவரை படக்குழுவினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பிறகென்ன காலில் மாவுக்கட்டு. `சிலம்பாட்டம்' சிம்புவுக்காக காத்திருக்கிறது.

Labels:

2 Comments:

Blogger puduvaisiva said...

சண்டை மற்றும் ஆக்‍ஷன் காட்சிகளில் வழக்கமாக நடிகர்கள் ஏதாவது காயம்பட்டுக் கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நடனம் ஆடும் போது அடிபட்டுக் கேட்டிருக்கிறீர்களா?

ஆம். சிலம்பரசன் தான் அந்த நடிகர்.

:-)) it is super kududurai

I think in this issue the Dance Master is DMK. so that it happen

puduvai siva

June 23, 2008 at 7:31 PM

 
Blogger கூடுதுறை said...

//ஆனால் நடனம் ஆடும் போது அடிபட்டுக் கேட்டிருக்கிறீர்களா? //

இப்போது சாதாரண நடனத்தை டீ.வியில் சாதாரணமாக ஆடி விடுகிறார்கள்...

ஆகவே சிம்பு ரிஸ்க் எடுத்துதான் டான்ஸ் ஆட முயற்சி எடுத்துள்ளார்...

June 23, 2008 at 7:53 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home