தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Saturday, March 15, 2008

பதிவர்கள் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு

பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு


பல வெளியூர்களில் சந்திப்பு நடப்பதை பார்த்துவிட்டு நாமும் அதைப்போல ஒர் சந்திப்பு ஏற்படத்தாலாம்என நானும் வால்பையனும் பேசிக்கொண்டோம்.

ஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்
இருப்பதாக தெரியவில்லை.

ஆகவே, ஈரோடு மாவட்ட அளவில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமா?
எனக்கேட்டார். அதுவும் நல்ல யோசனை எனக்கூறி இவ்வழைப்பை பதிவிடுகிறேன்.

ஈரோடு மாவட்டத்தின் பதிவுலக தங்கங்களே தங்களின் மேலான ஆதரவை பின்னுட்டத்தில் இட்டு தங்களின் வருகையை தெரிவியுங்கள்...

வர இயலாதவர்களும் பின்னுட்டமிட்டு தங்களின் இருப்பையாவது தெரிவுங்கள்.

பதிவிடாத வாசகர்களும் கலந்துகொள்ளாலாம். படிக்கமட்டும் நேரம் உள்ள வாசகர்கள் அதிகம் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

தினம் நேரம் ஆகியவைகளை கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம்.

இதில் நாமக்கல் மாவட்டத்தையும் இணைத்துக்கொள்ளாலமா?

யோசனை தெரிவியுங்கள்

2 Comments:

Anonymous Anonymous said...

அப்புறம் இந்த Word Verification ஐ தூக்கிடுங்க. கமெண்ட் போடறதுகுள்ள குட்டிபாப்பா எனக்கே கண்ண கட்டுது

March 15, 2008 at 2:40 PM

 
Anonymous Anonymous said...

நேத்து தான் சுந்தர் கோவை பதிவர் சந்திப்புக்கு சென்றேன்.
கரூர் மற்றும் கோவை நண்பர்களும் நமது சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வமாய் உள்ளார்கள் ஆகையால் இந்த மாத கடைசியில் நமது சந்திப்பை வைத்து கொண்டால் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மற்றபடி பெரும்பான்மை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுபடுகிறேன்

வால்பையன்

March 17, 2008 at 1:12 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home